Thursday 25 October 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 22.10.2018

தனிநபர் தகவல் பாதுகாப்பு மிக முக்கியமானது. இன்றைய கணினி யுகத்தில் நம் அன்றாடத் தேவைகளுக்குக் கூட இணையத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் எல்லா இடங்களிலும் நமது எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பேஸ்புக், கூகுள் என முன்னணி தகவல் பரிமாற்ற நிறுவனங்களிலேயே தகவல் திருட்டு இலகுவாக இடம்பெறும் போது மற்ற நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம்? நமது தகவல்களுக்கு நாமே பொறுப்பு. உணர்ந்து நடந்து கொள்வது அவசியம்.

(22.10.2018) 



ஒரு வழிப் பயணம்

*******

இருவிழி வழியே
கருவிழி கண்டேன்
மான்விழி கொண்டு 
என்விழி நோக்கி
உயிர்வழி நுழைந்து
உயிர்வலி தந்தாய்
வேல்விழியாளே
என் வலி அறியாயோ
ஒருவழிப் பயணம் காதல்
வரும்வழி தெரியும்
மீளும்வழி அறியேன்
உன்விழி ஒன்றே - என்
காதல் பயணிக்கும் வழி!

- சிகரம் பாரதி 

(22.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 

Dialog Axiata இலங்கையில் 5G சோதனையையே வெற்றிகரமாக முடித்திருக்கிறது. சில இடங்களில் 4.5G இணைப்புகளையும் வழங்கியிருக்கிறது. Hutch Sri Lanka இப்போது தான் 4G வழங்கவே ஆரம்பித்திருக்கிறது. வெளங்கிரும்!

இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? 

(22.10.2018) 

அல்ஜசீரா தொலைக்காட்சி கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா 7, இங்கிலாந்து 5, பாகிஸ்தான் 3 தடவைகள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய அணிகள் குறைந்த பட்சம் தலா ஒரு தடவை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளன. 'முனாவர் ஆவணங்கள்' என்னும் பெயரில் அல்ஜசீரா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் முக்கிய வீரர்களே ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் புதிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபை விரிவான விசாரணை நடத்தி உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். 

(22.10.2018) 

No comments :

Post a Comment

Ads

My Blog List