பூவெல்லாம் உன் வாசம்
******
பூவுக்கு ஏதடி வாசம்
உன் இதழ்களில் தேன்குடிக்கும்
வண்டுகளின் தொல்லை தாங்காமல்
உன் வாசத்தையெல்லாம்
நீ தானே உயில் எழுதி வைத்தாய்?
- சிகரம் பாரதி
(23.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை)
என் எண்ண
ஊஞ்சலில் ஆடுகிறேன்
உன் நினைவுகள் ஆட்டுவித்துக்
கொண்டேயிருக்கின்றன
எது வரை ஆட முடியும்
உன் நினைவுகளுக்கா பஞ்சம்
வாழ்நாள் முழுவதும்
என்னை ஆட்டுவிக்குமே?
(23.10.2018)
இலங்கை: கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் அமைப்பில் 2019ஆம் ஆண்டு முதல் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே அடுத்த வருடம் முதல் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் இந்த மாற்றங்களை அவதானித்துக் கொள்ளுங்கள். மாதிரி வினாப்பத்திரங்கள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து பயிற்சி செய்யுங்கள். இந்த இணைப்பில் தமிழ் மொழி மூல வினாத்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.
(23.10.2018)
No comments :
Post a Comment