Thursday 25 October 2018

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு மீண்டும் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகம் தொடர்கிறது.

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வலைப்பதிவுகளில் எழுதிவரும் புலம்பெயர் தமிழரான கானா பிரபா "மடத்துவாசல் பிள்ளையாரடி" , "ரேடியோஸ்பதி" மற்றும் "உலாத்தல்" ஆகிய வலைத்தளங்களின் சொந்தக்காரர். "வாண்டுமாமா - எங்கள்  பால்ய காலத்துக் கதை சொல்லி" , "மனதோடு பேசிய ஸ்வர்ணலதா" மற்றும் "திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

"ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவானது ஈழத்து வலைப்பதிவர்களால் நடாத்தப்படும் ஒரு குழும வலைப்பதிவாகும். சுமார் 40 பேரளவில் இவ்வலைப்பதிவுக்கு தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர். "பெண்களும் நகைகளும்" மற்றும் "நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவை. பங்களிப்போர் பட்டியல் நீளமாக இருக்கும் அளவுக்கு படைப்புகள் வெளிவராததும் ஏனோ?



நம்முடைய கருவறைப் பயணம் எப்படி இருக்கும்? உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரியாதவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஹாரியின் "ஹாரி 2G" வலைத்தளத்தின் "எமது கருவறை படி நிலைகள்" என்ற பதிவைத்தான். மேலும் இவரது "IDEAS OF ஹாரி" தளத்தில் எழுதியுள்ள "கோச்சடையான் (2014) பொம்மை படம் பம்பர் ஹிட் ஆன கதை" ஒரு கைதேர்ந்த திரை விமர்சகனின் பதிவாக அமைந்துள்ளது.

மேலும் இலங்கை சாராத தளங்களில் வெளிவந்துள்ள ஆனால் மலையகம் மற்றும் ஈழம் சார்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடிய பதிவுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்." என்று சொல்கிறது "மனசாட்சி" தளத்தின் "மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்".

ஈழ வரலாற்றுத் தொடர் - ஈழத்தின் உருவாக்கம் தொடங்கி ராஜீவின் மரணம் வரை - "ஈழம் : முகப்புப் பக்கம்"


இன்னும் இருக்கிறது. நேரம் போதாமை காரணமாக மிகுதி அடுத்த பதிவில்...

அதுவரை ,
அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

No comments :

Post a Comment

Ads

My Blog List