Monday 22 October 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 21.10.2018

நீண்ட காலக் கனவாக இருந்த ஊடகத்துறையில் கால்பதிக்கும் கனவு நனவாகியிருக்கிறது. ஆனால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. காரணம் ஆரம்ப சம்பளம் மிகக் குறைவு. மீண்டும் ஏழு வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்ட நிலை. தாக்குப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை கைபிடித்து அழைத்துச் செல்வதும் கைவிடுவதும் காலத்தின் கைகளில் தான் இருக்கிறது. 

(20.10.2018) 

வெளிநாட்டில் வசிக்கும் மிகப்பெரிய பணக்காரர் விஜய். தேர்தலில் வாக்களிப்பதற்காக (?) இந்தியா வருகிறார். ஆனால் தேர்தலில் அவரது வாக்கையே கள்ள வாக்கு போட்டுவிடுகிறார்கள். அவர்கள் யார் எவர் என்று கண்டுபிடித்து அழித்து தனது பண பலத்தால் மாற்று அரசை அமைப்பது தான் சர்க்கார்.

மிடில...
#sarkar #சர்க்கார் 



(20.10.2018) 

நான் தருவேன் 
*****
நான் சூடும் மணமாலை/ 
நம் உறவுகள் / 
கூடி நிற்கும் இவ்வேளை / 
குறைவில்லா வாழ்வை / 
தாயாய் தந்தையாய் நானுனக்கு / 
தருவேன் நிச்சயமாய்! 

(21.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைக்கு ஆதரவாக வடக்கு தமிழ் மக்களும் கொழும்பு வாழ் தமிழர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

1000 ரூபா சம்பள உயர்வு என்பது தற்காலிக தீர்வு மட்டுமே. மேலும் 1000 ரூபா சம்பள உயர்வு மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று உறுதி கூற முடியாது. குறைந்த பட்சம் 25 நாள் வேலை வழங்கப்பட வேண்டும். 15 அல்லது 20 நாள் வேலை வழங்கப்படுமானால் சம்பள உயர்வு வீண் தான்.

மலையக மக்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால் மலையக மக்களுக்கு 20,000 அடிப்படை சம்பளத்துடன் மாதாந்த சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

செய்வார்களா? 

(21.10.2018)

No comments :

Post a Comment

Ads

My Blog List