Monday 3 September 2018

வாழ்க்கை அற்பமானதா?

தூறல்- 03 

'இந்த வாழ்க்கை , உடம்பு, உறவுகள், சொத்துக்கள் என எல்லாமே அற்பமானவை. சொர்க்க வாழ்க்கை ஒன்றே உண்மையானது. இந்த அற்பமான வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.'- எல்லா சமயங்களுமே இப்படித்தான் நமக்குப் போதிக்கின்றன. காலத்துக்குக் காலம் பல சமய அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர். சமயங்களும் அதனைப் போதிப்பவர்களும் சொல்வது போல வாழ்க்கை அற்பமானதா? 

நமது பிறப்பையும் இறப்பையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை நம்மால் தீர்மானிக்க முடியும். 

Image Credits to its owner only


ஒரு கணம் இன்றைய உலகத்தை உங்கள் மனக்கண் முன் கொண்ண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். என்னுடைய 'தூறல்களைப்' போல மணம் வீசிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் வலைப் பூக்கள், உலகையே தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கும் இணையம், அந்த இணையத்தையும் மிஞ்சி விடத் துடிக்கும் கையடக்கத் தொலைபேசிகள், பிரம்மாண்டத் தொழிநுட்பங்கள், வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் என்று எண்ணற்ற அதிசயங்கள் உங்கள் மனக் கண்ணில் விரியும். 

இவ்வளவு அற்புதங்களையும் உருவாக்கியது 'அற்பமான வாழ்க்கை' யை வாழ்ந்து கொன்ன்டிருக்கும் மனிதன் தான். எல்லாமே மனிதனின் முயற்சியால் உருவானது தானே? இதை யாராவது மறுக்கப் போகிறீர்களா? அல்லது இதற்குப் பின்னும் வாழ்க்கை அற்பமானதென்று யாராவது சொல்வீர்களா? அது மட்டுமல்ல, இது வரை உங்களில் யாராவது சொர்க்கத்தை நேரடியாகப் பார்த்ததுண்டா? அல்லது மரணத்திற்குப் பின் இன்னதுதான் நடக்கும் என்று உங்களால் நிச்சயித்துக் கூற முடியுமா? இல்லை! நிச்சயமில்லாத சொர்க்கத்திற்காக இருக்கின்ற வாழ்க்கையை நரகமாக்க வேண்டுமா? ஆகவே, இன்றே வாழ்க்கையை வாழுங்கள். அற்பமானதென்று சொல்லி விலகி ஓடாதீர்கள். வாழ்க்கை அற்பமானதல்ல - அற்புதமானது! 

பதிவின் தலைப்பு : வாழ்க்கை அற்பமானதா?

வலைப்பதிவு : தூறல்கள்

வெளியிட்ட திகதி : 08.09.2010 

#வாழ்க்கை #மனிதன் #எண்ணங்கள் #உணர்வுகள் #தூறல்கள் #வலைப்பதிவு #மீள் #தமிழ் #பகிர்வு #முயற்சி #சொர்க்கம் #நரகம் #சிகரம் 

No comments :

Post a Comment

Ads

My Blog List